தமிழ்நாடு

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாளையொட்டி 3 நாட்களுக்கு 925 பஸ்கள் கூடுதலாக இயக்கம்

Published On 2024-04-04 10:20 GMT   |   Update On 2024-04-04 10:20 GMT
  • சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முகூர்த்த நாளான நாளை (வெள்ளிக்கிழமை), வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும். மேலும், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பஸ்களும், சனிக்கிழமை 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 925 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News