தமிழ்நாடு

மார்ச் 31-ந்தேதி வரை விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா செல்ல அனுமதி- இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு அங்கீகாரம்

Published On 2023-10-24 08:25 GMT   |   Update On 2023-10-24 08:25 GMT
  • சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.
  • அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை:

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்வதற்கு அந்த நாட்டின் விசா கட்டாயம் இருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் இருந்தும் சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எனவே இனி இந்த 7 நாடுகளில் இருந்தும் இலங்கை செல்ல விசா தேவையில்லை.

பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

Tags:    

Similar News