தமிழ்நாடு
நாய் கண்காட்சியில் இடம்பெற்ற பல்வேறு ரக நாய்கள்.

ஏற்காட்டில் 5 லட்சம் பூக்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-05-28 09:20 GMT   |   Update On 2022-05-28 09:20 GMT
ஏற்காடு கோடைவிழா மலர்கண்காட்சியில் 5 லட்சம் பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்பட்டால் இருந்தது. இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி காட்சி படுத்தப்பட்டுள்ளுது. இதற்காக இங்குள்ள கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும் ஏறி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து .விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக சின்-சான் பொம்மை, வள்ளுவர் கோட்டம், போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

சுற்றுலா பயணிகள் அமர 2 குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்கின்றனர்.

மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக இன்றும் நாளையும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரு வழி பாதையாக செய்யப்பட்டுள்ளது. . 4-வது நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
Tags:    

Similar News