தமிழ்நாடு
தக்காளி

திருவள்ளூரில் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை

Published On 2022-05-15 06:09 GMT   |   Update On 2022-05-15 06:09 GMT
திருவள்ளூர் மார்க்கெட்டுக்கு பெங்களூர், ஆந்திராவில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது. மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் காய்கறிகளில் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மார்க்கெட்டுக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் திருவள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

திருவள்ளூர் மார்க்கெட்டுக்கு பெங்களூர், ஆந்திராவில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது. மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் காய்கறிகளில் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.

சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை ஆகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் 30 வரை விற்கப்பட்டது.

தக்காளி விலை உச்சம் அடைந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News