தமிழ்நாடு செய்திகள்
ஜி.கே.வாசன்

பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை

Published On 2022-04-16 10:11 IST   |   Update On 2022-04-16 10:11:00 IST
ஆசிரியர் தகுதி தேர்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தவிர்த்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு, அரசுப் பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போது பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணியை எதிர்நோக்கி காத்துக்கிடக்கிறார்கள். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தவிர்த்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News