தமிழ்நாடு செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதால் போக்குவரத்து பாதிப்பு- 16 மணி நேரம் தவித்த பயணிகள்
திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பழுதான லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் வாகனங்கள் தொடர்ந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தமிழகம்- கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வன விலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலத்துக்கு கிராணைட் பாரம் ஏற்றி வந்த ஒரு லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டு இருந்தது. லாரி மாலை 4 மணியளவில் ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாகனங்கள் அனைத்தும் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறம்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் அதிக பாரம் காரணமாக கிரேன் மூலமாக லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை.
இதனால் திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து விடிய, விடிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் இரவு முழுவதும் பெண்கள் குழந்தைகளுடன் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மலை பாதையில் குறைந்த எடையுள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால் சுமார் 30 முதல் 40 டன் எடையுள்ள லாரியை திம்பம் மலைப்பாதையில் சர்வ சாதாரணமாக இயக்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பழுதான லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் வாகனங்கள் தொடர்ந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் லாரி பழுது சரி செய்யப்பட்டது. இதன் பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து 16 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டு மற்ற வாகனங்கள் சென்றன.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தமிழகம்- கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வன விலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலத்துக்கு கிராணைட் பாரம் ஏற்றி வந்த ஒரு லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டு இருந்தது. லாரி மாலை 4 மணியளவில் ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாகனங்கள் அனைத்தும் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறம்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் அதிக பாரம் காரணமாக கிரேன் மூலமாக லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை.
இதனால் திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து விடிய, விடிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் இரவு முழுவதும் பெண்கள் குழந்தைகளுடன் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மலை பாதையில் குறைந்த எடையுள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால் சுமார் 30 முதல் 40 டன் எடையுள்ள லாரியை திம்பம் மலைப்பாதையில் சர்வ சாதாரணமாக இயக்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பழுதான லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் வாகனங்கள் தொடர்ந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் லாரி பழுது சரி செய்யப்பட்டது. இதன் பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து 16 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டு மற்ற வாகனங்கள் சென்றன.