தமிழ்நாடு செய்திகள்
தளர்வுகள் எதிரொலி- ஊட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதாலும், சுற்றுலா தலங்கள் பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியது.
ஊட்டி:
கொரோனா தொற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மேலும் சுற்றுலா தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது. இதனால் நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 27-ந் தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது.
ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதாலும், சுற்றுலா தலங்கள் பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியது.
குறிப்பாக வார இறுதி நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த வாரமும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாகவே இருந்தது. நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 3,700 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 5,300 பேர் வந்திருந்தனர்.
அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 1,000 பேரும், நேற்று 1,500 பேரும் வந்திருந்தனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 900 பேரும், நேற்று 1,400 பேர் வந்திருந்தனர். தவிர தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லார் பழப்பண்ணை உள்ளிட்ட தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்களிலும், ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கொரோனா தொற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மேலும் சுற்றுலா தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது. இதனால் நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 27-ந் தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது.
ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதாலும், சுற்றுலா தலங்கள் பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியது.
குறிப்பாக வார இறுதி நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த வாரமும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாகவே இருந்தது. நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 3,700 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 5,300 பேர் வந்திருந்தனர்.
அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 1,000 பேரும், நேற்று 1,500 பேரும் வந்திருந்தனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 900 பேரும், நேற்று 1,400 பேர் வந்திருந்தனர். தவிர தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லார் பழப்பண்ணை உள்ளிட்ட தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்களிலும், ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.