தமிழ்நாடு
நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாராயணசாமி நாயுடு சிந்தனைகள், எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக நமது அரசு இருக்கும் என இந்நாளில் உறுதி ஏற்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு உழவர் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் வாழ்நாளின் இறுதி வரை உழைத்த உத்தம தியாகி நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாள் இன்று. அவரது சிந்தனைகள், எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக நமது அரசு இருக்கும் என இந்நாளில் உறுதி ஏற்கிறேன். பெரியவரின் புகழ் எந்நாளும் நிலைக்கட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.