தமிழ்நாடு செய்திகள்
கோப்பு படம்.

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஒரேநாளில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

Published On 2022-02-06 14:09 IST   |   Update On 2022-02-06 14:09:00 IST
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
எடப்பாடி:

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் வாரச்சந்தை கூடியது. இதில் ஆடுகள், கோழிகள் மற்றும் காய்கறிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

சந்தைக்கு மொத்தம் 4 ஆயிரத்து 500 ஆடுகள், 2 ஆயிரத்து 500 கோழிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.4 ஆயிரத்து 600 முதல் ரூ.6 ஆயிரத்து 100 வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரத்து 200 வரையும், வளர்ப்பு குட்டி ஆடுகள் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது.

சேவல்கள் ரூ.1000 முதல் ரூ.4 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. கோழிகள் ரூ.100 முதல் ரூ.1000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகள் 100 டன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் 60 கிலோ எடை கொண்ட சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

ஒரே நாளில் சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News