தமிழ்நாடு
விருத்தாசலத்தில் உள்ள தெற்கு பெரியார் நகர் கொரோனா தொற்று பரவல் காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ள காட்சி

கொரோனா தொற்று பாதிப்பு- விருத்தாசலத்தில் 5 தெருக்களுக்கு சீல்

Published On 2022-01-18 04:38 GMT   |   Update On 2022-01-18 04:38 GMT
விருத்தாசலத்தில் உள்ள 33 வார்டுகளிலும் 94 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் வீதிகளை மீண்டும் தகரங்களை கொண்டு அடைத்து வருகின்றனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முக கவசம் அணியாமல் இருந்ததற்காக 2 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், 14 கடைகளுக்கு தலா ரூ. 500, 17 தனிநபர்களுக்கு ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

விருத்தாசலத்தில் உள்ள 33 வார்டுகளிலும் 94 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் வீதிகளை மீண்டும் தகரங்களை கொண்டு அடைத்து வருகின்றனர்.

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட ஜங்‌ஷன் ரோடு, வி.என்.ஆர். நகர் செல்லும் வழி, ஆலடி ரோடு, தெற்கு பெரியார் நகர், டிரைவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இதனால் நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உத்தரவின்பேரில் அந்த பகுதிகளுக்கு செல்லும் பாதை அனைத்தும் தகரத்தால் அடைக்கப்பட்டு வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிகளுக்குள் செல்லமுடியாதபடி தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலசந்தர், சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


Tags:    

Similar News