தமிழ்நாடு
கொரோனா வைரஸ்

பேராவூரணி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி - வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்

Published On 2022-01-17 11:06 GMT   |   Update On 2022-01-17 11:06 GMT
பேராவூரணி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதோடு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.
பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இருமல், தொண்டை கரகரப்பு இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

இதில் ஞாயிறு மாலை அவருக்கு கொரோனா பாசிடிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட தோடு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். கடந்த 2 நாட்களாக தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள், தங்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா காரணமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று திங்கள்கிழமை பேராவூரணியில் நடந்த ஏழை மக்கள் 60 பேருக்கு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News