தமிழ்நாடு செய்திகள்
இவர்கள் எல்லாம்... ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சப்பட வேண்டாம்
ஐரோப்பாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பின்போது 65 ஆயிரம் நோயாளிகளில் ஆயிரம் பேர் இறந்தனர். ஆனால் ஒமைக்ரான் பாதிப்பில் 95 ஆயிரம் நோயாளிகளில் 100 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
ஊட்டி:
கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு 95 சதவீதம் இருக்க வாய்ப்பில்லை. 5 சதவீதத்தினருக்கு மிக லேசான பாதிப்பே இருக்க வாய்ப்புள்ளது.
டெல்டா வைரசிற்கும், ஒமைக்ரான் வைரசிற்கும் இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடுகள், டெல்டா வைரஸ் பரவும் வேகத்தை காட்டிலும் 40 மடங்கு அதிவேகமாக பரவக்கூடியது தான் ஒமைக்ரான் வைரஸ். ஆனால் டெல்டா வைரசின் வீரியத்தில் பத்தில் ஒரு பங்கு வீரியத்தை மட்டுமே ஒமைக்ரான் வைரஸ் கொண்டுள்ளது.
குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள ஐரோப்பிய நாடுகளில் கூட முந்தைய வைரசின் பாதிப்புகளை காட்டிலும் குறைவான உயிரிழப்பே காணப்படுகிறது.
மத்திய அரசின் நிரஞ் ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் இந்தியாவில் 2022 பிப்ரவரி மாத மத்தியில் 3-வது அலை உருவாகக் கூடும் என்று கணித்துள்ளார். ஆனால் 2-வது அலையில் இருந்த உயிரிழப்புகள் அளவிற்கு இந்த முறை இருக்காது.
ஐரோப்பாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பின்போது 65 ஆயிரம் நோயாளிகளில் ஆயிரம் பேர் இறந்தனர். ஆனால் ஒமைக்ரான் பாதிப்பில் 95 ஆயிரம் நோயாளிகளில் 100 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
எனவே ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கவலை கொள்ள தேவையில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு குறித்த வல்லுநர் குழுக்களில் பெரும்பாலும் மருத்துவர்களையே சேர்த்துள்ளனர்.
ஆனால் இந்த வகையான வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலஜிஸ்ட்களை சேர்த்திருக்க வேண்டும். காரணம் நுண்ணுயிரியல் குறித்த விரிவான, தெளிவான ஆழங்கால் பட்டபுரிதல் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்களுக்கு தான் இருக்கும்.
எனவே தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பு வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலாஜிஸ்டுகளை இடம் பெற வைக்க வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் சிறப்பான முறையில் ஒமைக்ரான் குறித்த அடிப்படை புரிதல்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் ஏற்படும் அச்சத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு 95 சதவீதம் இருக்க வாய்ப்பில்லை. 5 சதவீதத்தினருக்கு மிக லேசான பாதிப்பே இருக்க வாய்ப்புள்ளது.
டெல்டா வைரசிற்கும், ஒமைக்ரான் வைரசிற்கும் இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடுகள், டெல்டா வைரஸ் பரவும் வேகத்தை காட்டிலும் 40 மடங்கு அதிவேகமாக பரவக்கூடியது தான் ஒமைக்ரான் வைரஸ். ஆனால் டெல்டா வைரசின் வீரியத்தில் பத்தில் ஒரு பங்கு வீரியத்தை மட்டுமே ஒமைக்ரான் வைரஸ் கொண்டுள்ளது.
எனவே ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழப்பு என்பது மிகமிக குறைந்தே காணப்படுகிறது.
குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள ஐரோப்பிய நாடுகளில் கூட முந்தைய வைரசின் பாதிப்புகளை காட்டிலும் குறைவான உயிரிழப்பே காணப்படுகிறது.
மத்திய அரசின் நிரஞ் ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் இந்தியாவில் 2022 பிப்ரவரி மாத மத்தியில் 3-வது அலை உருவாகக் கூடும் என்று கணித்துள்ளார். ஆனால் 2-வது அலையில் இருந்த உயிரிழப்புகள் அளவிற்கு இந்த முறை இருக்காது.
ஐரோப்பாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பின்போது 65 ஆயிரம் நோயாளிகளில் ஆயிரம் பேர் இறந்தனர். ஆனால் ஒமைக்ரான் பாதிப்பில் 95 ஆயிரம் நோயாளிகளில் 100 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
எனவே ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கவலை கொள்ள தேவையில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு குறித்த வல்லுநர் குழுக்களில் பெரும்பாலும் மருத்துவர்களையே சேர்த்துள்ளனர்.
ஆனால் இந்த வகையான வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலஜிஸ்ட்களை சேர்த்திருக்க வேண்டும். காரணம் நுண்ணுயிரியல் குறித்த விரிவான, தெளிவான ஆழங்கால் பட்டபுரிதல் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்களுக்கு தான் இருக்கும்.
எனவே தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பு வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலாஜிஸ்டுகளை இடம் பெற வைக்க வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் சிறப்பான முறையில் ஒமைக்ரான் குறித்த அடிப்படை புரிதல்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் ஏற்படும் அச்சத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்