செய்திகள்
டிடிவி தினகரன்

மழையால் பாதித்த மக்களுக்கு அ.ம.மு.க.வினர் உதவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன் டுவிட்

Published On 2021-11-27 07:02 GMT   |   Update On 2021-11-27 07:02 GMT
பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பகுதியில் உள்ள கட்சி தொண்டர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

தற்போது பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News