செய்திகள்
கோவை, நீலகிரியில் கடும் குளிர்- பனிமூட்டம்
நீலகிரியில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் லேசான வெயிலும், அதிகாலையில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவுகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள், அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருவங்காடு, உபதலை, ஓட்டுப்பட்டரை, காட்டேரி, சேலாஸ் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழையால் ஆறு மற்றும் ஓடைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகளும் உருவாகி அதில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நீலகிரியில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் லேசான வெயிலும், அதிகாலையில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த குளிர் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கே தயங்கி உள்ளேயே முடங்கி கொள்கின்றனர். அத்தியாவசியத்திற்கு மட்டுமே வெளியில் வருகின்றனர்.
வீட்டில் இருந்தாலும் கடும் குளிர் வாட்டுவதால் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் குளிரை தாங்கி கொள்வதற்காக தொப்பி, மப்புலர், பனியன் உள்ளிட்ட உலர் ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவருமே குளிரால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு சில இடங்களில் ஆட்டோ, வேன் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
பகல் நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை, கூடலூர்- ஊட்டி சாலை, கோத்தகிரி- ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை என நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்கின்றனர்.
கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழையும், பகலில் மிதமான கால நிலையும் காணப்படுகிறது. இதுதவிர கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் தினந்தோறும் குளிரும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், பால்காரர்கள், பொதுமக்கள் என அனைவருமே குளிரால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
கடும் குளிரால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள், அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருவங்காடு, உபதலை, ஓட்டுப்பட்டரை, காட்டேரி, சேலாஸ் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழையால் ஆறு மற்றும் ஓடைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகளும் உருவாகி அதில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நீலகிரியில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் லேசான வெயிலும், அதிகாலையில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த குளிர் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கே தயங்கி உள்ளேயே முடங்கி கொள்கின்றனர். அத்தியாவசியத்திற்கு மட்டுமே வெளியில் வருகின்றனர்.
வீட்டில் இருந்தாலும் கடும் குளிர் வாட்டுவதால் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் குளிரை தாங்கி கொள்வதற்காக தொப்பி, மப்புலர், பனியன் உள்ளிட்ட உலர் ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவருமே குளிரால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு சில இடங்களில் ஆட்டோ, வேன் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
பகல் நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை, கூடலூர்- ஊட்டி சாலை, கோத்தகிரி- ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை என நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்கின்றனர்.
கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழையும், பகலில் மிதமான கால நிலையும் காணப்படுகிறது. இதுதவிர கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் தினந்தோறும் குளிரும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், பால்காரர்கள், பொதுமக்கள் என அனைவருமே குளிரால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
கடும் குளிரால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.