செய்திகள்
கோப்புப் படம்

கனமழை எதிரொலி - கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2021-11-02 01:29 GMT   |   Update On 2021-11-02 02:59 GMT
கனமழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை:

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில்  தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News