செய்திகள்
வீட்டுமனை பட்டா இலவசம்

தடுப்பூசி போட்டால் வீட்டுமனை பட்டா இலவசம்

Published On 2021-09-20 03:53 GMT   |   Update On 2021-09-20 03:53 GMT
தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீத தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், தடுப்பூசி போடும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 சென்ட் அளவுள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும், இதனை ஒரு மாத காலத்திற்குள் அமைச்சர் வழங்குவார்கள் என்று அறிவித்துள்ளார்.



மேலும்   தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள சேலைகள், ரூ.500 மதிப்புள்ள வேட்டிகள் தலா 10 பேருக்கு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் தடுப்பூசி போட குவிந்தனர்.


Tags:    

Similar News