செய்திகள்
கொள்ளை நடந்த வீடு.

சார் பதிவாளர் ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

Published On 2021-09-04 11:15 IST   |   Update On 2021-09-04 11:15:00 IST
வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்துள்ள சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வரும் கவிதா வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் வைர நெக்லஸ், கம்மல், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கமாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News