செய்திகள்
தற்கொலை

ஊராட்சி மன்ற தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-02-15 07:29 IST   |   Update On 2021-02-15 07:29:00 IST
ஊராட்சி மன்ற தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். என்.முக்குளம் ஊராட்சி மன்ற தலைவர்.

இவர் நேற்று தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News