செய்திகள்
காஞ்சிபுரம் கலெக்டர்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று

Published On 2020-11-10 06:31 GMT   |   Update On 2020-11-10 06:31 GMT
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் எம்.பி.க்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட மகேஸ்வரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News