செய்திகள்
தற்கொலை

ஈரோடு அருகே பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை

Published On 2020-10-27 06:36 GMT   |   Update On 2020-10-27 06:36 GMT
ஈரோடு அருகே பப்ஜி விளையாடிய சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல். சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஒரே மகன் அருண் (வயது 14). சென்னை வண்டலூரில் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

அருண் எந்நேரமும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். நாளடைவில் அருண் இந்த விளையாட்டுக்கு அடிமையானார். இதனால் மன உளைச்சலில் அருண் இருந்துள்ளார். இதிலிருந்து அருணை மீட்டு வெளியே கொண்டுவர அவரது பெற்றோர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கள்ளிபாளையத்தில் உள்ள நண்பரின் தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்து கோயம்புத்தூர் சூலூரில் உள்ள மனநிலை மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக அருணை சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் அருண் தூக்குப்போட்டு தற்கெலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பப்ஜி கேம் விளையாட்டால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News