செய்திகள்
தற்கொலை

தேவகோட்டையில் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-10 05:20 GMT   |   Update On 2020-09-10 05:20 GMT
தேவகோட்டையில் இன்று அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:

தேவகோட்டை அண்ணா சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48). இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு பிரதீப் என்ற மகனும், அஸ்விதா என்ற மகளும் உள்ளனர்.

கார்த்திகேயன்- அமுதா இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் அதனடிப்படையில் ஆசிரியர் பணி அரசு வழங்கியது. அதன்படி கார்த்திகேயன் தேவகோட்டை அருகே சமூகநாதபட்டிணம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

சில மாதங்களாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. நேற்று இரவும் வழக்கம் போல் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் விரக்தியடைந்த கார்த்திகேயன் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறி ராம் நகரில் உள்ள தனியார் டென்னிஸ் கிளப்பில் உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கார்த்திகேயன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பொதுமக்கள் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா, சப்- இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக தந்தையின் உடலை பார்த்து மகள் அஸ்விதா தேசிய நெடுஞ்சாலையில் கதறி அழுத காட்சி அனைவரது கண்ணிலும் கண்ணீர் வரவழைத்தது.

ஆசிரியர் தற்கொலை குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு சபாபதி உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு ஆசிரியர் கார்த்திகேயன் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேநீர் அருந்தி விட்டு சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News