செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

மதுரையில் இன்று 110 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-09-09 02:02 GMT   |   Update On 2020-09-09 02:02 GMT
மதுரை மாவட்டத்தில் இன்று 110 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,098 ஆக உள்ளது.
மதுரை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 14,988 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,098 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 13,555 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 368 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News