செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 51 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-09-06 17:00 GMT   |   Update On 2020-09-06 17:00 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 783 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 401
செங்கல்பட்டு - 2,723
சென்னை - 11,264
கோவை - 4,796
கடலூர் - 3,742
தர்மபுரி - 256
திண்டுக்கல் - 991
ஈரோடு - 1,147
கள்ளக்குறிச்சி - 1,045
காஞ்சிபுரம் - 1,428
கன்னியாகுமரி - 918
கரூர் - 350
கிருஷ்ணகிரி - 555 
மதுரை - 986
நாகை - 1,100
நாமக்கல் - 609
நீலகிரி - 381
பெரம்பலூர் - 99
புதுக்கோட்டை - 969
ராமநாதபுரம் - 334
ராணிப்பேட்டை - 795
சேலம் - 3,092
சிவகங்கை - 202
தென்காசி - 683
தஞ்சாவூர் - 973
தேனி - 850
திருப்பத்தூர் - 432
திருவள்ளூர் - 1,600
திருவண்ணாமலை - 1,469
திருவாரூர் - 626
தூத்துக்குடி - 662
திருநெல்வேலி - 1,171
திருப்பூர் - 1,079
திருச்சி - 926
வேலூர் - 1,102
விழுப்புரம் - 1,148
விருதுநகர் - 465
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 20
உள்நாடு - 67
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 51,458

Tags:    

Similar News