செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சையின் போது வெளியேறிய கொரோனா நோயாளி மீது வழக்கு
புதுவையில் மருத்துவமனையில் சிகிச்சையின் போது வெளியேறிய கொரோனா நோயாளி மீது வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் தலைமறைவாகி விடுவதாக டாக்டர்கள் மூலம் புகார்கள் வந்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒரு கொரோனா நோயாளி வெளியே சென்று மதுகுடித்து வந்ததை கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் பதிவிட்டு வேதனை தெரிவித்திருந்தார்.
அதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் வெளியே நடமாடுவதால் தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து வீடுகளில் சிகிச்சை பெறுவோரை அதிகளவில் கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட லாஸ்ப்பேட்டை, கல்பனா சாவ்லா நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவர் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவ அதிகாரிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து 29-ந்தேதி காலை வெளியே சென்று மாலை 5 மணிக்கு திரும்பி உள்ளார்.
அவருடைய நடவடிக்கை கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்ததால் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
இவர் மீது லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய புதுவை திருமுடி நகரைச் சேர்ந்த வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த 2 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருவாரத்திற்கு வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் அந்த குடும்பத்தின் தலைவர் வீட்டுத் தனிமையில் இருக்காமல் அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்துள்ளார்.
இதுகுறித்து புதுவை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் தலைமறைவாகி விடுவதாக டாக்டர்கள் மூலம் புகார்கள் வந்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒரு கொரோனா நோயாளி வெளியே சென்று மதுகுடித்து வந்ததை கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் பதிவிட்டு வேதனை தெரிவித்திருந்தார்.
அதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் வெளியே நடமாடுவதால் தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து வீடுகளில் சிகிச்சை பெறுவோரை அதிகளவில் கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட லாஸ்ப்பேட்டை, கல்பனா சாவ்லா நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவர் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவ அதிகாரிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து 29-ந்தேதி காலை வெளியே சென்று மாலை 5 மணிக்கு திரும்பி உள்ளார்.
அவருடைய நடவடிக்கை கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்ததால் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
இவர் மீது லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய புதுவை திருமுடி நகரைச் சேர்ந்த வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த 2 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருவாரத்திற்கு வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் அந்த குடும்பத்தின் தலைவர் வீட்டுத் தனிமையில் இருக்காமல் அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்துள்ளார்.
இதுகுறித்து புதுவை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.