செய்திகள்
ஆயுதப்படை பெண் ஆய்வாளர் மகேஸ்வரி

தந்தை மரணம்- சோகத்திலும் கடமை தவறாத பெண் காவலர்

Published On 2020-08-15 09:59 GMT   |   Update On 2020-08-15 09:59 GMT
நெல்லையில் தந்தையின் உயிரிழப்புக்கு கூட உடனடியாக செல்லாமல் சுதந்திர தின காவல்துறையினரின் அணிவகுப்பை பெண் ஆய்வாளர் ஒருவர் தலைமையேற்று நடத்தியுள்ளார்.
நெல்லை:

நெல்லை வ.உ.சி.மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா அணிவகுப்பை ஆயுதப்படை பெண் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார். திண்டுக்கல்லில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் தந்தை நாராயணசாமி உயிரிழந்தார். தந்தை உயிரிழந்த செய்தியை யாரிடமும் சொல்லாமல், திண்டுக்கல்லுக்கு உடனடியாக செல்லாமல் அணிவகுப்பை நடத்தினார்.

அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சி முடிந்த பிறகே, திண்டுக்கல்லுக்கு ஆய்வாளர் மகேஸ்வரி புறப்பட்டு சென்றார். தந்தையின் உயிரிழப்பின்போது கடமை தவறாமல் அவர் நடந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News