செய்திகள்
கொரோனா வைரஸ்

பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா

Published On 2020-08-06 12:20 IST   |   Update On 2020-08-06 12:20:00 IST
பூம்புகார் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எஸ்.பவுன்ராஜ். இவர் கடந்த 30-ந் தேதி மயிலாடுதுறையில் நடந்த புதிய மாவட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் நாகை செல்வராசு, மயிலாடுதுறை ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கொரோனா பரிசோதனைக்கு தனது ரத்த மாதிரியை கொடுத்து இருந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பவுன்ராஜ் எம்.எல்.ஏ., சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் கடந்த 3-ந் தேதி மயிலாடுதுறையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே 2 எம்.பி.க்கள் மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பவுன்ராஜ் எம்.எல்.ஏ.வையும் சேர்த்து டெல்டாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Similar News