செய்திகள்
திமுக பிரமுகர் ஆறுமுகம்

காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகருக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-05 12:09 GMT   |   Update On 2020-07-05 12:09 GMT
காஞ்சிபுரம் திமுக நகர செயலாளரும் காஞ்சிபுரம் பெருநகராட்சி முன்னாள் நகரமன்ற தலைவருமான சன்பிராண்ட் கே.ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,450-ஆக அதிகரித்துள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,404 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் இன்று 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,550 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் திமுக  நகர செயலாளரும் காஞ்சிபுரம் பெருநகராட்சி முன்னாள்  நகரமன்ற தலைவருமான சன்பிராண்ட் கே.ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News