செய்திகள்
கொரோனா வைரஸ்

கறம்பக்குடி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை

Published On 2020-07-04 08:59 GMT   |   Update On 2020-07-04 08:59 GMT
கறம்பக்குடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கறம்பக்குடி:

கறம்பக்குடி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் ஆகியோர் சுகாதார பணியாளர்களுடன் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் போன்றவை வீடு, வீடாக வழங்கப்பட்டு வருகிறது. முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, முககவசம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கறம்பக்குடி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News