செய்திகள்
கோப்பு படம்

செங்கல்பட்டில் மதுபோதையில் பைக் ஓட்டிய வாலிபர் அதிரடி கைது

Published On 2020-03-16 13:04 IST   |   Update On 2020-03-16 13:04:00 IST
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் மது போதையில் பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் மதுபோதையில் இருப்பது தெரிந்தது.

விசாரணையில் அவர் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சுரேஷ் என்பதும், பிளம்பராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. மது அருந்திவிட்டு அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து இருந்தார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதி மன்றம் உத்தர விட்டிருந்தது.

அதன்படி போதையில் இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுரேசை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News