செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்த காட்சி.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சாமி தரிசனம்

Published On 2020-03-12 04:29 GMT   |   Update On 2020-03-12 04:29 GMT
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
சித்தோடு:

சேலத்தில் இருந்து கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காரில் சென்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று இரவு சுமார் 8.15 மணி அளவில் திடீரென பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் சங்கமேஸ்வரர், வேதநாயகி, ஆதிகேசவபெருமாள் உட்பட பல சாமி சன்னதியில் பயபக்தியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டு பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
Tags:    

Similar News