செய்திகள்
பொன்.ராதாகிருஷ்ணன்

சிறுபான்மையினர் வாக்கிற்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2020-01-13 04:22 GMT   |   Update On 2020-01-13 04:22 GMT
சிறுபான்மையினர் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்வதாக முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர்:

அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வருங்காலங்களில் கூட்டணியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதிகளால் காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் யாரும் விவாதிக்கவில்லை.

இது தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினர் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன.

தி.மு.க., கூட்டணி கட்சிகளோடு பயங்கரவாதிகளும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு தி.மு.க. விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் இதனை கூறி வருகிறேன். தற்போது கேரளா, குஜராத், புதுடெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தை சார்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சிகளுக்கு, நான் அமைச்சராக இருந்தபோது ரூ.1,700 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தேன். தற்போது பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மத்தியஅரசின் நிதி விரைவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News