செய்திகள்
திமுக

நீலகிரி மாவட்டத்தில் 5 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது

Published On 2020-01-03 10:42 IST   |   Update On 2020-01-03 10:42:00 IST
உள்ளாட்சி தேர்தலில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 5 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களிலும், 2-ம் கட்டமாக ஊட்டி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்தது.

நீலகிரியில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 35 கிராம ஊராட்சி தலைவர், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 89 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். நீலகிரியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 404 பதவிகளுக்கு 1,479 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 5 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு-

1-வது வார்டு - அனிபா (தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

2-வது வார்டு - பொந்தோஸ் (தி.மு.க.)

3-வது வார்டு - சசிகலா (அ.தி.மு.க.)

4-வது வார்டு - வனஜா (தி.மு.க.)

5-வது வார்டு - ராஜன் (தி.மு.க.)

6-வது வார்டு - மீனா (திமு.க.)

வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்கினார்.

Similar News