செய்திகள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொட்டில் குழந்தை மையம் திறப்பு
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொட்டில் குழந்தைகள் மையம் திறக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ஊட்டி:
பெண் சிசு கொலையை தடுக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை எனும் உன்னத மனிதாபிமான திட்டத்தை கொண்டு வந்தார்.
முதன் முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் 2001-ம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இதன் மூலம் 5 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டு இன்று அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்- பெண் சமம் என்று பெற்றோரிடையே ஏற்பட்ட மனமாற்றம் போன்றவைகளால் தொட்டில் குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளாக மீட்கப்படவில்லை.
இந்நிலையில் சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே இருந்த சாலையோரம் ஒரு குழந்தையும், மஞ்சனக்கொரை பகுதியில் வனப்பகுதியையொட்டி உள்ள புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையும் வீசப்பட்டு கிடந்தது.
தகவல் கிடைத்தும் குழந்தைகள் மீட்கப்பட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. அங்கு இன்குபெட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொட்டில் குழந்தைகள் மையம் திறக்கப்பட்டது. இது குறித்து ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரியில் சமீப காலங்களில் பச்சிளம் குழந்தைகளை வனப்பகுதிகளில் அனாதையாக வீசி செல்வது அதிகமாகி வருகிறது. அதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை தடுக்கும் வகையிலும், அனாதையாக வீசி செல்லப்படும் குழந்தைகளை காக்கும் வகையிலும் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தொட்டில் அமைந்து உள்ள பகுதியின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் ஏதுமில்லை. எனவே, குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தையை வனப்பகுதியிலோ, சாலையோரங்களிலோ, குப்பை தொட்டிகளிலோ, வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலோ, முட்புதர்களிலோ விட்டு செல்லாமல் அந்த தொட்டிலில் குழந்தையை விட்டு செல்ல வேண்டும். அந்த தொட்டிலில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே குழந்தையை விட்டு சென்றதும், அந்த தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களை பற்றிய தகவல்கள் வெளியிடப்படமாட்டாது. குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பராமரிப்பும், அதற்கு பாதுகாப்பும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பெண் சிசு கொலையை தடுக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை எனும் உன்னத மனிதாபிமான திட்டத்தை கொண்டு வந்தார்.
முதன் முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் 2001-ம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இதன் மூலம் 5 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டு இன்று அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்- பெண் சமம் என்று பெற்றோரிடையே ஏற்பட்ட மனமாற்றம் போன்றவைகளால் தொட்டில் குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளாக மீட்கப்படவில்லை.
இந்நிலையில் சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே இருந்த சாலையோரம் ஒரு குழந்தையும், மஞ்சனக்கொரை பகுதியில் வனப்பகுதியையொட்டி உள்ள புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையும் வீசப்பட்டு கிடந்தது.
தகவல் கிடைத்தும் குழந்தைகள் மீட்கப்பட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. அங்கு இன்குபெட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொட்டில் குழந்தைகள் மையம் திறக்கப்பட்டது. இது குறித்து ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரியில் சமீப காலங்களில் பச்சிளம் குழந்தைகளை வனப்பகுதிகளில் அனாதையாக வீசி செல்வது அதிகமாகி வருகிறது. அதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை தடுக்கும் வகையிலும், அனாதையாக வீசி செல்லப்படும் குழந்தைகளை காக்கும் வகையிலும் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தொட்டில் அமைந்து உள்ள பகுதியின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் ஏதுமில்லை. எனவே, குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தையை வனப்பகுதியிலோ, சாலையோரங்களிலோ, குப்பை தொட்டிகளிலோ, வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலோ, முட்புதர்களிலோ விட்டு செல்லாமல் அந்த தொட்டிலில் குழந்தையை விட்டு செல்ல வேண்டும். அந்த தொட்டிலில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே குழந்தையை விட்டு சென்றதும், அந்த தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களை பற்றிய தகவல்கள் வெளியிடப்படமாட்டாது. குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பராமரிப்பும், அதற்கு பாதுகாப்பும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.