செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் இருந்து 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையம், வெளிநாட்டு முனையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பயணிகள் உடமைகளை ஸ்கேன் செய்யும் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அந்த சூட்கேஸை சோதனை செய்தனர். அதில் சுமார் 3 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும். அதனை விட்டுச் சென்ற கடத்தல்காரர்கள் யார்? என்று தெரியவில்லை. அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து தங்கம் கடத்தி வந்த சூட்கேசை விட்டுச்சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்திற்குள் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வெளிநாட்டவர் ஒருவர் அந்த சூட்கேசை வைத்து செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நேரத்தில் வந்த ஜெர்மனி, துபாய், ஹாங்காங் நாட்டில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளின் பட்டியலை வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையம், வெளிநாட்டு முனையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பயணிகள் உடமைகளை ஸ்கேன் செய்யும் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அந்த சூட்கேஸை சோதனை செய்தனர். அதில் சுமார் 3 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும். அதனை விட்டுச் சென்ற கடத்தல்காரர்கள் யார்? என்று தெரியவில்லை. அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து தங்கம் கடத்தி வந்த சூட்கேசை விட்டுச்சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்திற்குள் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வெளிநாட்டவர் ஒருவர் அந்த சூட்கேசை வைத்து செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நேரத்தில் வந்த ஜெர்மனி, துபாய், ஹாங்காங் நாட்டில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளின் பட்டியலை வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.