செய்திகள்
கதிர்ஆனந்த்

வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அத்திவரதரை வழிபட்டார்

Published On 2019-08-04 09:55 GMT   |   Update On 2019-08-04 09:55 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று காலை குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார். அவர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அத்தி வரதரை வழிபட்டார்.

காஞ்சிபுரம்:

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று காலை குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார். அவர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அத்தி வரதரை வழிபட்டார்.

பின்னர் கதிர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

40 வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் விழா என்பதால் அத்திவரதரை வழிபட வந்தேன். தேர்தல் வெற்றிக்காக வழிபட வரவில்லை. தி.மு.க. ஆன்மீக பாதையில் செல்லவில்லை. ஏற்கனவே பயணித்த பாதையில்தான் செல்கிறது.

பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் கனிமொழியால் வேலூர் தொகுதியில் பிரசாரத்துக்கு வரமுடியவில்லை. எனினும் அவர் அன்றாட நிகழ்வுகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டு அறிந்து வந்தார். வேலூர் தொகுதி தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News