செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் முடிவு- விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

Published On 2019-05-24 07:21 GMT   |   Update On 2019-05-24 07:21 GMT
பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 4,64,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர்:

தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

விருதுநகர் தொகுதியில் 14,80,600 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,66,217 வாக்குகள் பதிவானது.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர் 4,64,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி 3,15,055 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழிதேவன் 52,591, அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் 1,07,033, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி 56,815 வாக்குகள் பெற்றுள்ளனர். 
Tags:    

Similar News