செய்திகள்
கலெக்டர் உமாமகேஸ்வரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு - கலெக்டர் உத்தரவு

Published On 2019-04-20 06:21 GMT   |   Update On 2019-04-20 06:21 GMT
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். #PonnamaravathiViolence
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்களை கைது செய்யக்கோரி அந்த சமுதாய பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அமைதி திரும்பும் வகையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். #PonnamaravathiViolence

Tags:    

Similar News