செய்திகள்

தேர்தலையொட்டி நாளை முதல் 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு பூட்டு

Published On 2019-04-15 08:03 GMT   |   Update On 2019-04-15 08:03 GMT
தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மொத்தம் 7 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. #Loksabhaelections2019 #Tasmac
சென்னை:

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னதாகவே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இப்படி மூடப்படும் மதுக்கடைகளை தேர்தல் முடிந்த பின்னர்தான் 19-ந்தேதிதான் திறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மொத்தம் 7 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

இதையடுத்து மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி பதுக்கி வைத்து 3 நாட்களும் கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

இதனை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறையின் போது திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த பெண்கள் பலரும் சிக்கியுள்ளனர். அவர்களையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #Tasmac
Tags:    

Similar News