செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 215 வாக்கு சாவடிகள் பதட்டமானவை - கலெக்டர் அறிவிப்பு

Published On 2019-04-02 16:26 IST   |   Update On 2019-04-02 16:26:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 215 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார். #LokSabhaElections2019
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளுடன் திருப்போரூர் சட்ட பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளது.

அதன்படி கடந்த தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெற்ற வாக்கு சாவடிகள் குற்றவழக்குகள் பதிவான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டன.

இதில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் வருகின்றது. அங்கு 16 வாக்குசாவடிகள் பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 24 வாக்குசாவடிகளும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 175 வாக்கு சாவடிகளும் பதட்டமானதாக தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4122 வாக்கு சாவடிகளில் 215 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். #LokSabhaElections2019

Similar News