செய்திகள்

பல்லாவரம் அருகே கழிவு நீர் தொட்டி இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

Published On 2019-03-29 09:15 GMT   |   Update On 2019-03-29 09:15 GMT
பல்லாவரம் அருகே கழிவு நீர் தொட்டி இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி கண்ணபிரான் தெருவில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாரி (வயது22), முகமது அவரித் (23), அஜய் (23) ஆகிய தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்த கழிவறையில் அடைப்பு ஏற்பட்டது. அன்சாரி, முகமது அவரித், அஜய் ஆகிய 3 பேரும் நேற்று இரவு 8 மணிக்கு அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டி சுவர்இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர்.

இதில் அன்சாரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். முகமது அவரித், அஜய் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே முகமது அபரித் பலியானார்.

அஜய் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News