செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2019-03-29 05:51 GMT   |   Update On 2019-03-29 05:51 GMT
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport

திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க மத்திய வான் நுண்ணறிவு சுங்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருவாரூரை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை போட்டனர். இதில் அவர் உடலில் மறைத்து 13,800 அமெரிக்க டாலர், 9,300 யூரோ, 1,150 சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த வெளிநாட்டு பணத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 500 என அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நேரமாக இருப்பதால் வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விமான நிலையத்தில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. #TrichyAirport

Tags:    

Similar News