செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் 3 நிமிடம் மட்டுமே பிரசாரம் செய்த தினகரன்

Published On 2019-03-28 10:05 GMT   |   Update On 2019-03-28 10:05 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் கும்மிடிப்பூண்டியில் 3 நிமிடம் மட்டுமே பிரசாரம் செய்தார். #TTVDinakaran
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று இரவு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேனில் நின்று பிரச்சாரம் செய்ய கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு அவர் இரவு 9.57-க்கு கும்மிடிப்பூண்டி பஜாருக்கு வேனில் வந்தார். தினகரன் 10 மணியை தாண்டி பிரச்சாரம் செய்வாரா? தேர்தல் விதிமுறையை மீறுவாரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளும் போலீசாரும் மறைமுகமாக காத்திருந்தனர்.

ஆனால் டி.டி.வி.தினகரன், வேட்பாளரின் பெயரைச் சொல்லி அவரை அறிமுகப்படுத்தினார். பின்னர் ‘‘நமக்கு எந்த சின்னம் கொடுக்கப்பட்டாலும் அது வெற்றியின் சின்னம்’’ என்று தனது கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவாறு சரியாக 3 நிமிடத்தில் தனது பேச்சை முடித்தார்.

பின்னர் சைகை மூலம் அவர் வாக்குகளை பொதுமக்களிடம் சேகரித்தார். தொண்டர் ஒருவர் கொடுத்த பூச்செண்டையும் அவர் வாங்க மறுத்து விட்டார். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அதனை மீறக்கூடாது என அந்த தொண்டரிடம் எடுத்து கூறினார். #TTVDinakaran
Tags:    

Similar News