செய்திகள்

பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்- தலைமறைவான வாலிபரை பிடிக்க போலீசார் வலைவீச்சு

Published On 2019-03-16 12:31 GMT   |   Update On 2019-03-16 12:31 GMT
அரூர் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அரூர்:

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கூக்கடப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். 

நேற்று காலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்ற வாலிபர் அருகில் இருந்த கொட்டாய்க்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். 

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ராஜசேகரனை தீவிரமாக தேடி வருகிறார்.
Tags:    

Similar News