செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்- டிஜிபி அலுவலகத்தில் கமல்ஹாசன் புகார்

Published On 2019-03-12 09:01 GMT   |   Update On 2019-03-12 09:01 GMT
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். #PollachiAbuseCase
சென்னை:

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று மதியம் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் டிகே.ராஜேந்திரனிடம் மனு அளித்தார். அதில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். #PollachiAbuseCase
Tags:    

Similar News