செய்திகள்

பந்தலூர் அருகே லாரியில் கடத்திய ரூ.37 லட்சம் பறிமுதல் - 2 வாலிபர்கள் கைது

Published On 2019-02-23 10:23 IST   |   Update On 2019-02-23 10:23:00 IST
பந்தலூர் அருகே லாரியில் கடத்திய ரூ.37 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.

பந்தலூர்:

நீலகிரி எல்லை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் முத்தங்கா சோதனைச் சாவடி உள்ளது. இங்கு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்பாபு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, கோழிக்கோடு நோக்கி லாரி வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

லாரியில் டிரைவரின் இருக்கைக்கு மேல்பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல், ரூ.37 லட்சம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதனையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கோழிக்கோட்டை சேர்ந்த முகமது நவாஷ் (வயது 29) மற்றும் முகமது சித்திக், (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News