செய்திகள்
போலீஸ் ஏட்டு முனியன்

ஆரணி அருகே போலீஸ் ஏட்டு வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-02-15 10:22 GMT   |   Update On 2019-02-15 10:22 GMT
ஆரணி அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி களம்பூர் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் முனியன் (வயது 45). போளூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (40). திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டுவாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சரண் (11), முகில் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். சரண் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். முகில் (9). 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

முனியன் கடந்த 10 நாட்களாக விடுப்பு எடுத்து வீட்டில் தங்கி இருந்தார். லீவு முடிந்து நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் வெளியே சென்ற அவர் அங்குள்ள குளக்கரை அருகே வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முனியன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முனியன் தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News