செய்திகள்
கோவையில் காணாமல் போன நாயை பேனர் வைத்து தேடும் உரிமையாளர்
கோவையில் காணாமல் போன நாயை அதன் உரிமையாளர் பேனர் வைத்து தேடி வருகிறார். மேலும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கோவை:
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் தீபக்(வயது 45). ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் 8 மாதமாக ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.
ராய் என்று பெயரிடப்பட்ட அந்த நாய் கடந்த ஜனவரி 24-ந்தேதி வீட்டில் இருந்து காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் நாய் கிடைக்கவில்லை.
நாய் மீது அதிக பாசம் வைத்திருந்த தீபக் தற்போது அந்த நாயை தேடி கோவை முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தீவிரமாக தேடி வருகிறார்.
மேலும் ஒரு டெம்போவில் நாயின் படத்துடன் கூடிய பேனர் வைத்து கோவை முழுவதும் சுற்றி வருகிறது.
தனது நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்க இருப்பதாக உரிமையாளர் தீபக் தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் தீபக்(வயது 45). ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் 8 மாதமாக ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.
ராய் என்று பெயரிடப்பட்ட அந்த நாய் கடந்த ஜனவரி 24-ந்தேதி வீட்டில் இருந்து காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் நாய் கிடைக்கவில்லை.
நாய் மீது அதிக பாசம் வைத்திருந்த தீபக் தற்போது அந்த நாயை தேடி கோவை முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தீவிரமாக தேடி வருகிறார்.
மேலும் ஒரு டெம்போவில் நாயின் படத்துடன் கூடிய பேனர் வைத்து கோவை முழுவதும் சுற்றி வருகிறது.
தனது நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்க இருப்பதாக உரிமையாளர் தீபக் தெரிவித்துள்ளார்.