செய்திகள்

பாதாள சாக்கடைக்கு பதிலாக ரூ.200 கோடியில் கசடு கழிவு அகற்றும் திட்டம்- அமைச்சர் வேலுமணி தகவல்

Published On 2019-02-11 07:48 GMT   |   Update On 2019-02-11 07:48 GMT
பாதாள சாக்கடைக்கு பதிலாக ரூ.200 கோடி செலவில் கசடு கழிவு அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #TNAssembly #SPVelumani
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அளித்த பதில் வருமாறு:-

பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் கிடைப்பது இல்லை. இதை கருத்தில் கொண்டு கசடு கழிவு அகற்றும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

அதன்படி ரூ.200 கோடி செலவில் 51 நகரங்களிலும், 59 பேரூராட்சிகளிலும், 49 நகரங்களிலும் கசடு கழிவு அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாத இடங்களில் கழிவுநீர் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #SPVelumani
Tags:    

Similar News