செய்திகள்

ஒரே எண் கொண்ட 2 பான் கார்டுகள் - வங்கி அதிகாரி அதிர்ச்சி

Published On 2019-02-07 04:13 GMT   |   Update On 2019-02-07 04:13 GMT
திருச்சி செந்தில்குமார், கீழவாளாடி செந்தில்குமார் இருவரது பான் கார்டு எண்கள் ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்துள்ளதால், இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர். #Pancard
திருச்சி:

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர். இவரது மகன் செந்தில்குமார் (வயது 45). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர், வங்கியில் தனிநபர் கடன் கேட்டு ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். அதனை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது, அவரது பான் கார்டு எண்ணில் வந்த சான்றானது அதே பெயரில் வேறு ஒரு முகவரியை காண்பித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி, பான் கார்டு எண்ணானது வேறு ஒரு முகவரியில் இருப்பதாக காட்டுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து வங்கி அதிகாரி, இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தியதோடு, பான் கார்டை ஆய்வு செய்தபோது கணினியில் வந்த முகவரியை செந்தில்குமாரிடம் தெரிவித்தார்.



அதன் அடிப்படையில் செந்தில்குமார், கீழவாளாடியை சேர்ந்த மற்றொரு செந்தில்குமாரை நேரில் சந்தித்து விசாரித்தபோது, இருவரது பான் கார்டு எண்கள் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.  #Pancard

Tags:    

Similar News