செய்திகள்
வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
ஸ்ரீ முஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடி ஆகும்.
இந்த ஏரிமூலம் அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் வீராணம் ஏரி பூர்த்திசெய்கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.
வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீர் தேவைப்படும்போது மீண்டும் வடவாறு வழியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வீராணம் ஏரி பாசன பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருக்கிறது. இதனால் தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 74 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடி ஆகும்.
இந்த ஏரிமூலம் அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் வீராணம் ஏரி பூர்த்திசெய்கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.
வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீர் தேவைப்படும்போது மீண்டும் வடவாறு வழியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வீராணம் ஏரி பாசன பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருக்கிறது. இதனால் தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 74 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake